கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ருஜின” புகையிரத சேவை மீண்டும் இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்புக்களில் பயணிப்பதற்காக மாத்திரமே பிரயாணச்சீட்டு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.