follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவெலிஓயாவில் சீனி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ அமைச்சரவை அனுமதி!

வெலிஓயாவில் சீனி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ அமைச்சரவை அனுமதி!

Published on

லங்கா சீனிக் கம்பனியின் கீழ் புதிய சீனித் தொழிற்சாலையொன்றை மொனராகலை மாவட்டத்தின் வேலிஓயா பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிதாக நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் 600,000 மெட்ரிக்தொன் சீனித் தேவை காணப்படுகின்றது. அவற்றில் 85% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக வருடாந்தம் 45 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டில் உள்ளூரில் 54,000 மெட்ரிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின்...