லங்கா சீனிக் கம்பனியின் கீழ் புதிய சீனித் தொழிற்சாலையொன்றை மொனராகலை மாவட்டத்தின் வேலிஓயா பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிதாக நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 600,000 மெட்ரிக்தொன் சீனித் தேவை காணப்படுகின்றது. அவற்றில் 85% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக வருடாந்தம் 45 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டில் உள்ளூரில் 54,000 மெட்ரிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.