காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்தாண்டு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட காரணங்களினால் 360 யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 50 சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.
அதன்படி, சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மரணித்ததாகத் தெரியவந்துள்ளது.