follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி விரைவில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி விரைவில்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால் அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதானால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இங்கிலாந்தில் உள்ளமையினால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முடியாமல் உள்ளது.

இந்தநிலையில் தேர்தலை பிற்போடுவதற்கான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி மற்றுமொரு அமைச்சுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மற்றுமொரு அமைச்சின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஓராண்டு பிற்போட்டப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் ஓராண்டு காலப்பகுதிக்கு மாத்திரமே பிறபோட முடியும்.

இந்தநிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...