பூநகரி பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. தவிசாளர் தலைமை உரையினை அடுத்து இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
20 உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில், 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் 5 உறுப்பினர்கள் சபைக்கு இன்றைய தினம் சமூகமளிக்காதிருந்தனர்.