Homeஉள்நாடுஅதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்கவும்! ஐ.நா. வலியுறுத்து

அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்கவும்! ஐ.நா. வலியுறுத்து

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் கருத்து வெளியிட்ட ஸ்டீபன் டுஜாரிக்,

‘ ஐ.நா. செயலாளர் எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார்.” என்று குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.” எனவும் ஐ.நா. செயலாளரின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular