Homeஉலகம்லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி காஷ்மீரில் சுட்டுக்கொலை!

லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி காஷ்மீரில் சுட்டுக்கொலை!

 

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது.

அப்பகுதியில் காஷ்மீர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும், காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை இந்திய இராணுவம் வெடி வைத்து தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular