follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

Published on

எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கருத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமான நிறுவனங்களை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும்போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையும் என அமைச்சர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...