Homeஉள்நாடுஇளம் குடும்பப் பெண் வன்புணர்வு: 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!

இளம் குடும்பப் பெண் வன்புணர்வு: 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வவுனியாவில் 31 வயது இளம் குடும்பப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப் படும் 37 வயது குடும்பஸ்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுபொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்பப் பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயலில் வசிக்கும்குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர்தனது வீட்டுக்கு அழைத்து மேற்படிபெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிர யோகம் செய்துள்ளார்.

இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி மேற்படி பெண்ணை மீண்டும் பல தடவைகள் அழைத்து அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான மேற்படி பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூவரசங் குளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலை மறைவாகியிருந்தார்.

இந்நிலையில்,வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்தநிலையில் 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular