இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத இழுவைப்படகு தொழில் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவகக் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்திய மீனவரின் சட்டவிரோத இழுவைமடித் தொழில் நடவடிக்கையானது வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்றது. இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள், கோரிக்கை களை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில்,எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதியில் இறங்கி போராடத் தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் தீவகக் கடற்றொழில் அமைப்புக்க ளான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு,வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்
ளோம்.” எனவும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக் கிழமை நடைபெறும் இந்தப் போரட்டம் யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் செல்லவுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
