follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வருகிறதாம்! மக்கள் இன்னும் வரிசையில்

எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வருகிறதாம்! மக்கள் இன்னும் வரிசையில்

Published on

எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக எரிவாயு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அனைத்து எரிவாயு சிலிண்டர்களிலும் இருக்கும் எரிவாயு குழாய்களை (நொப்களை) மாற்றி புதிய குழாய்களைப் பொருத்த முடிவு செய்துள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சிலிண்டர்களில் புதிய குழாய்களை மாற்றி சந்தையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனால், சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,நுகர்வோர்கள் விரைவில் எரிவாயுவை கொள்வனவு செய்வதை இலகுவாக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை எரிவாயு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு இஎதிர்காலத்தில் எரிவாயு இறக்குமதியை சோதிக்கும் அதிகாரம் மற்றும் தரநிர்ணய நிறுவனம் பயன்படுத்தும் முறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...