follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுஅவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் குறித்து ஆராய விசாரணை குழு நியமனம்

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் குறித்து ஆராய விசாரணை குழு நியமனம்

Published on

கட்டான, கிம்புலாபிட்டிய, தாகொன்ன பகுதியில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதி பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், கெப்டன் தேமிய அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதிலிருந்து அவசரமாக தரையிறக்கப்பட்டமை வரையிலான முழு செயன்முறையை இந்த குழு ஆராயவுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதி கண்காணிக்கப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு அதிகாரிகள் குழு, நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதுடன், ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றது.

விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த விமான நிறுவனத்தின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....