நாளாந்த மரக்கறி விநியோகம் குறைவடைந்துள்ளதால் கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைக்குமெனவும், ஆனால் இன்று ஒரு இலட்சத்திற்கும் குறைவான மரக்கறிகளே கிடைக்பெற்றுள்ளதாக கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பி.பீ. திஸநாயக்க தெரிவித்துள்ளாா்.
காய்கறிகள் குறைந்துள்ளதால், மரக்கறி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் காய்கறி வாங்க வரும் நுகர்வோர் மற்றும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
கட்டுகஸ்தொட்டை பொருளாதார நிலையத்தில் மொத்த விலைகள் கெரட் ஒருகிலோ 400-450 ரூபாவுக்கும் , போஞ்சி 400 – 450 ரூபாவுக்கும், தக்காலி 200 – 250 ரூபாவுக்கும், கத்தரிக்காய் 300 – 350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.