சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சவூதி அரேபியாவுக்கு இன்று சென்றடைந்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் ஜித்தா நகரத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
அவருக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சவூதி செல்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், “சவூதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன” என்றார்.