follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP1மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்ய அனுமதி

மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்ய அனுமதி

Published on

மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் ட்ரைசைகிள்கள் (முச்சக்கர வண்டிகள்) பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சார முச்சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் போது மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தால் இயங்கக்கூடிய வகையில் மாற்றியமைக்கும் போது, மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகளைப் பயன்படுத்துவதால், அவ்வாறான முச்சக்கர வண்டிகளின் மொத்த எடை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக, இந்த முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் போது ஏற்படும் வரையறை சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, ஒரு முச்சக்கர வண்டியின் அதிகபட்ச மொத்த எடை 600 கிலோகிராம் ஆக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தின் வரையறையை திருத்துவதற்கு, 2022-08-08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அதிக தூரம் பயணிக்கக்கூடிய பேட்டரி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை, குளிரூட்டல் வசதிகள் கொண்ட ஆடம்பர முச்சக்கர வண்டிகளுக்கு அதிக திறன் கொண்ட பேட்டரி அமைப்பின் தேவை, மற்றும் மின்சார எதிர்ப்பு மூலம் இயங்கும் பிரேக்குகளைப் பயன்படுத்தும் போது சேர்க்கப்படும் எடை போன்ற தேவைகளை கருத்தில் கொண்டு, மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கர வண்டியின் மொத்த எடை, பேட்டரி அமைப்பின் எடை உட்பட, 650 கிலோகிராமை தாண்டக்கூடாது என வரையறையை மீண்டும் திருத்துமாறு, உள்ளூர் மின்சார முச்சக்கர வண்டி உற்பத்தி மற்றும் மாற்றியமைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் கொள்கை அனுமதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

"சிறி தலதா வழிபாடு" நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை(23) ஒரு...