follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது -...

கூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது – ஜனாதிபதி

Published on

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்க அமைச்சர்கள் மூவரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது அமைச்சரவை அமைச்சர்களின் பொறுப்பாகும் எனவும் அது முடியாத பட்சத்தில் அமைச்சரவையில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...