நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகபட்சம் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நிகழலாம்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.