follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதியினுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு

கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதியினுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு

Published on

கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவின் (Joseph Kabila) அரசியல் கட்சியை இடைநீக்கம் செய்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் கொங்கோ குடியரசின் ஜனாதிபதியாக செயற்பட்டிருந்தார்.

53 வயதான அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொங்கோ குடியரசில் இயங்கும் எம்.23 என்ற ஆயுதக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அவரது கட்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேசத் துரோக செயற்பாட்டில் ஈடுபட்டமைக்காக அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அந்த நாட்டு நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடென கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

விவாகரத்து வழக்கு – 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

விவாகரத்து வழக்கொன்றில் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக 200,000 லட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலி ஓயாவில் உள்ள...