அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெறும் என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தொிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியை சந்திப்பார்கள் எனவும் அமெரிக்காவுடனான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.