ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொது மாநாட்டின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் பதவிக்கு இம்தியாஸை பரிந்துரைத்ததாகவும், அதன்படி, அவர் மீண்டும் அந்தப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கட்சியின் தவிசாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் செயலாளருக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மார்ச் 18 ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கும் தனது தீர்மானத்தை கடிதத்தின் பிரதிகள் மூலம் பாக்கீர் மாக்கார் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பாக்கீர் மாக்காரின் இராஜினாமாவை ஏற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனங்களை வென்று ஒரு வலுவான கட்சியாக முன்னேறுவதற்கு முகாமில் விரிவான அனுபவத்தைக் கொண்ட பாக்கீர் மாக்காரின் தலைமை அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பல தலைவர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.