மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துளதாக விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு தெரியும்.
அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம், விவசாய திணைக்களம் உள்ளிட்ட திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம்.
எதிர்காலத்தில் பொருத்தமான கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள் ரீதியாக காணப்படுகின்றன. அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்.”