ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் துடுப்பாட்டம் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த துடுப்பாட்ட திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் துடுப்பாட்டம் செய்ய அனுப்பியது.
இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நரேன் அதிரடியாக ஓட்டங்களை குவித்து கொல்கத்தா அணியில் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் அவரது துடுப்பாட்டம் அணிக்கு கைகொடுக்காததால் அவர் நடுவரிசையிலும் பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டார்.
அவ்வகையில் ஐபிஎல் தொடரில் சுனில் நரேன், 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் துடுப்பாட்டம் செய்துள்ளார்.