தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் நோபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈகுவடார் நாட்டின் அதிபரான டேனியல் நோபாவின் பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார்.
இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை விடவும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.