follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1அமெரிக்காவிடம் வரி சலுகை கோரத் தயாராகும் இலங்கை

அமெரிக்காவிடம் வரி சலுகை கோரத் தயாராகும் இலங்கை

Published on

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியின் இடைநிறுத்தக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீடிக்க, இலங்கை அரசாங்கம் விரைவில் கோரிக்கை விடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை 44% ஆக உயர்த்தியதையடுத்து, இலங்கையில் கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதைச் சமாளிக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதிக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த வரி விதிப்பினால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பின் காரணமாக, புதிய வரி அமுலாக்கத்தை 90 நாட்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்தது.

இந்த காலத்தை ஆறு மாதங்களாக நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற இறக்குமதிகளை அதிகரிப்பதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைத்து, வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது குறித்தும் ஆராயப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கைக்கு அமெரிக்காவிலிருந்து 368.2 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும் இலங்கை 3 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த வர்த்தக இடைவெளியே அமெரிக்க அரசாங்கத்துக்குக் கரிசனைக்குரிய விடயமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அமெரிக்காவிலிருந்து விலங்குகளுக்கான உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...