follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுஉடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை

உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை

Published on

சக்குராய் (Sakurai) தனியார் நிறுவனத்தின் அனைத்து விதமான விமான சேவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது என  இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க  தெரிவித்துள்ளார்.

சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி, பயாகல கடற்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனத்துக்கு சொந்தமான செஸ்னா 172 ரக விமானமொன்று  கட்டான – கிம்புலாப்பிட்டி பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக இன்று  தரையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளானது.

இதன்போது, அதில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சக்குராய் ஏவியேஷன் லிமிட்டட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைளும், உடன் அமுலாகும் வகையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....