கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிமுறைகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி முதல் 10வது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று உருவாகியுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
1988 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க வாக்கெடுப்பு (சிறப்பு விதிமுறைகள்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கோசல நுவன் ஜயவீரா நேற்றுமுன்தினம் (06) மறைந்தார். அவர் மறையும் போது அவருக்கு 38 வயது ஆகியிருந்தது.