follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1மருந்து கொள்வனவுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை கோர அமைச்சரவை அனுமதி

மருந்து கொள்வனவுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை கோர அமைச்சரவை அனுமதி

Published on

பல வகையான மருந்துகளுக்கு சர்வதேச சப்ளையர்களிடமிருந்து ஏலங்களை அழைப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

புற்றுநோய், குறைந்த இரத்த அளவு சிகிச்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதன்படி, குறைந்த இரத்த அளவு (hypovolemia) மற்றும் இரத்தத்தில் குறைந்த அல்புமின் அளவைக் குணப்படுத்தப் பயன்படும் ஹியூமன் அல்புமின் சொல்யூஷன் 20%, 50 மில்லி பாட்டில்கள் 340,000 இனை கொள்வனவு செய்ய சர்வதேச போட்டி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை, குறிப்பிட்ட வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் 440 மில்லிகிராம் trastuzumab ஊசியின் 20 மில்லி 18,000 குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...