மியான்மர் நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாங்காக்கில் மக்கள் கட்டடங்களை விட்டு தெருக்களில் கூடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பேங்கொக்கில் நிலநடுக்கம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.