follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP1தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Published on

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி இவராவார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...