follow the truth

follow the truth

April, 1, 2025
Homeவிளையாட்டுதமிம் இக்பாலுக்கு சத்திரசிகிச்சை - தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில்

தமிம் இக்பாலுக்கு சத்திரசிகிச்சை – தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில்

Published on

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான தமிம் இக்பாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் திகதி டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மைதானத்துக்கு விரைந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் விமானம் மூலம் அவரை டாக்காவிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையடுத்து பாசிலதுன்னேசா வைத்தியசாலையில் தமிம் இக்பால் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் தமிம் இக்பால் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல்...

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்...

ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்...