follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை செவ்வாயன்று கையளிப்பு

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை செவ்வாயன்று கையளிப்பு

Published on

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கும், தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீட்டுகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆலோசனைக்கு அமைவாகவே பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகள் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது..

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 முதல் 25 ரூபா வரையில் திருத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...