follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP2இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து கலந்துரையாடல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து கலந்துரையாடல்

Published on

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று (24) கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிராந்திய அலுவலக மேலாளர்கள் (RM), செயற்பாட்டு மேலாளர்கள் (OM), அனைத்து டிப்போ பொறியியலாளர்கள் (DE), கணக்காளர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பிராந்திய மற்றும் டிப்போ மட்டத்தில் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...