follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

[UPDATE] தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

Published on

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் நாளை(27) இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————-[UPDATE]

புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தம்

25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புகையிரத பொது முகாமையாளர் கடிதம் மூலம் நேற்று(25) தொழிற்சங்கங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழிற்சங்க துறையினருடன் இன்று(26) தொலைக்காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...