follow the truth

follow the truth

March, 22, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் எனக்கு வேண்டாம்

பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் எனக்கு வேண்டாம்

Published on

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சில விடயங்களை இப்போதுதான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது. நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று. இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரியவந்தது. அதனால், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன...

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்றையதினம்...

கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனீபா

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ்...