கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சில பிரதேச மக்கள் அவசரமாக பீர் பாட்டில்களை சேகரித்து நடந்து கொண்ட விதத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லசித் மாலிங்க விமர்சித்துள்ளார்.
மாலிங்க தனது பேஸ்புக் கணக்கில் சோகமான Emoji பதிவை வெளியிட்டு, ‘system change ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது. அதற்காக எடுக்கும் முயற்சியும் ஒற்றுமையும் அற்புதம், இல்லையா? என்று பதிவிட்டுள்ளார்.