follow the truth

follow the truth

March, 21, 2025
HomeTOP1தேசபந்து நீதிமன்றில் ஆஜர்

தேசபந்து நீதிமன்றில் ஆஜர்

Published on

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சில நிமிடங்களுக்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

இத்தகைய பின்னணியில், அவர் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...