follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுபிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

Published on

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி (Electronic Tree-Wheeler – E-Tuk) அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் இன்று(18) ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச் சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும்.

பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும். இதன் தொடக்க விழா இன்று (18) பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...