follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுமியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

Published on

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், மார்ச் 18 ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த அளப்பரிய உதவிக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, மனித கடத்தல் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சு கடுமையாக வலியுறுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...