follow the truth

follow the truth

March, 21, 2025
HomeTOP2சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Published on

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார்.

சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக ற்றுலா சங்கமொன்றின் செயலாளர் .பி. விஜேசிங்க தெரிவித்தார்.

சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபா ஆகும். ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான முதலுதவி வசதிகள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகளை வழங்குவது தொடர்பில் சுற்றுலாத் துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...