follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅன்பைப் பகிர்வோம்! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 11 கைதிகளுக்கு சிறையில் இருந்து விடுதலை

அன்பைப் பகிர்வோம்! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 11 கைதிகளுக்கு சிறையில் இருந்து விடுதலை

Published on

சிறுதொகை அபராதத்தை செலுத்த முடியாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு பொதுநலன் கருதி விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

டெய்லி சிலோன் மற்றும் NEXTV ஆகிய டிஜிட்டல் செய்தித் தளங்களின் அனுசரணையுடன் Project Hope  (நம்பிக்கைத் திட்டம்) என்ற நற்பணியை மாலன் டேல் ஃபெரிரா இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

மிகச் சிறிய குற்றச் செயல்களுக்கான மிகக் குறைந்த அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களின் அபராதத் தொகையை செலுத்தி இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 9 ஆண்கள் 2 பெண்கள் என மொத்தம் 11 பேர் மொத்தமாக 45 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்தி விடுவிக்கப்பட்டனர். 5 ஆயிரம் ரூபா அபாராதம் செலுத்த முடியாத இந்தக் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததுடன், இவர்களுக்கான செலவுகளை மக்கள் நிதியில் இயங்கும் அரசாங்கமே செலவிட்டு வந்தது.

சிறையில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நாளாந்தம் 600 ரூபா விகிதம் 11 பேருக்கு நாளாந்தம் 6600 ரூபா செலவிடுகிறது. ஆறுமாதங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபா வரை செலவிட்டுள்ளது. தற்போது 45,000 ரூபா அபராதத்தை வழங்கி இவர்களுக்கான விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை என்பது மனிதர்களை சீர்த்திருத்தவே உதவும் என்ற அடிப்படையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு டெய்லி சிலோன், நேஒவவுஎ நிறுவனங்கள் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...