follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

Published on

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டார்.

இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை, டுட்டெர்டே டாவோ நகர மேயராக இருந்த 2011 முதல், பிலிப்பைன்ஸ் 2019 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகும் வரை நடந்த குற்றங்களை உள்ளடக்கியது.

கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டுட்டெர்டே, “இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அதை எதிர்க்க முடியாது” என்று கூறியிருந்தார்.

அவரது கைது, பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே நீதி கிடைத்ததாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில்...

ஹிருணிகா – ஹிரான் திருமண பந்தம் முடிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர்...