follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP2விவசாய SMS சேவை - மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

விவசாய SMS சேவை – மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

Published on

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது.

இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம்.

இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நெல் பயிருக்கு எண் 01 உம் மிளகாய் பயிருக்கு எண் 02 உம் சோளப் பயிருக்கு எண் 03 உம் பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம் உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம் புடலங்காய் பயிருக்கு எண் 06 உம் கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம் இட முடியும் என்பதுடன் தக்காளி பயிருக்கு எண் 08 உம் பப்பாளி பயிருக்கு எண் 09 உம் வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தயார்

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவை இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய துறைகள் என்பதால் என்றும் பொறுப்புக்கூறல் ஒருங்கிணைப்பு...

வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்...

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல...