முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.