follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP1எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச

எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

Published on

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மதவச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (01) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவிலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டிற்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியோ, பிரதமரோ, அல்லது அமைச்சர்களோ அல்ல, சாதாரண மக்களே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

எனவே, எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிரச்சினையைத் தீர்த்து, உடனடியாக எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...