ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விவாதங்கள் தொடர்பான இறுதி முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
அதற்கமைய, குறித்த நிர்வாகக் குழு கூட்டம் எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே இறுதி உடன்பாடு ஏற்படாததால், இந்தக் கலந்துரையாடல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.