follow the truth

follow the truth

February, 28, 2025
Homeஉள்நாடுநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

Published on

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் விமானப்படையில் தற்போது காணப்படும் தேவைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று இன்று (27) ஜனாதிபதி...

ஜனவரியில் மாத்திரம் 43 யானைகள் உயிரிழப்பு

2025 ஜனவரி மாதம் மனித - யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி...

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக மழை

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...