follow the truth

follow the truth

February, 23, 2025
HomeTOP2இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை - அப்ரிடி

இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை – அப்ரிடி

Published on

ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கருத்து தெரிவிக்கையில்; “பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட்...

அமைச்சர் நளின், SJB எம்பிக்கு தெரிவித்த கருத்துக்கு எதிராக NPP எம்பி எதிர்ப்பு

பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு தெரிவித்த கருத்துக்கு தனது...

ரயில் மோதி விபத்துக்குள்ளான யானைகளில் மேலும் ஒரு யானை குட்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக்...