follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

Published on

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.

நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.

HKU5-CoV-2 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களை பாதிக்கும் என்றாலும், அதன் பரவல் வீரியம் கோவிட் 19 வைரஸை விட சற்று குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...