வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் தளர்த்திய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.