follow the truth

follow the truth

February, 22, 2025
Homeஉள்நாடுதலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் மார்ச் 7வரை விளக்கமறியலில்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் மார்ச் 7வரை விளக்கமறியலில்

Published on

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று(20) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 1 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 4 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர்...

காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் ACJU பாராட்டு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து...

வெப்பமான வானிலை – மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கும்

இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....